புதுச்சேரியில் சிலிண்டர் மானியம் 300 ரூபாய் வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி மாநில அரசு சார்பாக சிலிண்டர் மானியமாக மாதம் தோறும் 300 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தலா 300 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு சிலிண்டருக்கு 150 ரூபாய் மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் எட்டியுள்ள நிலையில் துணைநிலை ஆளுநரின் இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.