ரூபாய் 2,000 மாற்ற ஆதார், பான் உள்ளிட்ட அடையாள அட்டை கட்டாயம் என உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அரசின் கொள்கை முடிவில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.