தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக அரசின்  சார்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் அரசு பள்ளியில் அதிகமானவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டி வந்தார்கள். இதனால் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தீவிர படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மட்டும் இன்றி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக  பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தனியார் பள்ளியை காட்டிலும் தரமான கல்வி, வசதியான வகுப்பறை, சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி என அனைத்தையுமே செய்து கொடுப்பதில் முழு கவனம் செலுத்தி வருவதாக அரசு தெரிவித்துள்ளது.