மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்குள் செல்ல பழைய முறை நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படும் என்று மாவட்ட வன அலுவலர் அறிவித்தார்.

இந்நிலையில் மீண்டும் கட்டணம் உயர்த்தி இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், தூண் பாறை மற்றும் குணா குகை ஆகிய சுற்றுலா தலங்களுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்ட வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.