சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது பல்கலைக்கழக துணை வேந்தர் கௌரி உரையாற்றினார். அவர் நிதி நெருக்கடியில் இருந்து பல்கலைக்கழகம் மீள்வதற்கு நிதி அமைச்சர் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் நிதி தொடர்பான கோரிக்கைகள் வந்தால் பல வகையான கேள்விகள் கேட்கப்படும். மேலும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விளக்கங்கள் இருந்தால் மட்டுமே நிதி கிடைக்கும் என்று அதிரடியான கருத்தை தெரிவித்தார்.