கேரள மாநிலத்தை சேர்ந்த லஷ்மி பிரியா என்ற 19 வயது பெண் வர்கலா சேர்நியூரில் வசித்து வருகின்றார். இவர் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாற இருவரும் காதலித்து வந்த சமயத்தில் லட்சுமி பிரியாவுக்கு அதே கல்லூரியில் படைக்கும் மற்றொரு மாணவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. அதனால் முதல் காதல் என்னை லட்சுமி பிரியா தவிர்த்து விட்டார்.

இதனால் மனமுடைந்த முதல் காதலன் லட்சுமி பிரியாவை சந்தித்து தன்னுடன் காதல் கொள்ள வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் லட்சுமி பிரியா தனது இரண்டாவது காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு முதல் காதலனை ஒரு இடத்திற்கு வரவழைத்து கடத்திச் சென்றுள்ளார். பின்னர் அவரை இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி இரவு முழுவதும் வைத்து சித்திரவதை செய்து அவரை நிறுவனம் ஆக்கி சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளனர்.

அதன் பிறகு அவரின் செல்போன் மற்றும் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி லட்சுமி பிரியாவை தேடி வந்த நிலையில் கேரளாவில் வைத்து அவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய லட்சுமி பிரியாவின் இரண்டாவது காதலர் மற்றும் கூலிப்படைகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.