ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்தது மத்திய அரசு. சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்தநாளான அன்று ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் பொது விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அறிவிப்பு ஏதும் வரவில்லையே என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறை என அறிவித்தது மத்திய அரசு.