ரயில்வே பாதுகாப்பு படையில் 9,000 பேர் பணி நியமனம் தொடர்பாக வெளியான தகவல் உண்மையில்லை என RPF விளக்கமளித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உதவி ஆய்வாளர், காவலர் பணி உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும், அதில் 50% பேர் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், பணி நியமனம் தொடர்பாக வெளியான தகவலில் உண்மையில்லை என RPF தெரிவித்துள்ளது.