திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஆளுநர் ஆர்.என். ரவியின் தாய் மற்றும் குஷ்பு குறித்து தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து கண்டனம் எழுந்த நிலையில், கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கும் என்று குஷ்பு கூறியிருந்த நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, குஷ்பு குறித்து அவதூறாக பேசியதற்காக திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.