திருச்சியில் கடந்த 30 வருடமாக செயல்பட்டு வந்த ஐஸ்கிரீம் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்ததாக கூறி ஐஸ்கிரீம் கடைக்கு உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சீல் வைத்த சம்பவத்தால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிகாரிகளின் சோதனையில் தரம் இல்லாத ஐஸ் கிரீம்கள் இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.