பிறந்து 37 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூர சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. இந்த ஈவு இரக்கமில்லாத செயலை செய்த தம்பதியின் மோகன் மற்றும் செண்பகவள்ளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

முதல் மனைவியுடன் விவாகரத்து பெறாமல் செண்பகவள்ளியை திருமணம் செய்து குழந்தை பெற்றது நீதிமன்றத்தில் பிரச்சனை வரலாம் என்று கருதி மோகன் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.