தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு தனியார் துறையுடன் சார்ந்த வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வருகின்றது. அதன்படி சேலம் மாவட்டம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜனவரி 19ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்  www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.