தைப்பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்த நிலையில் 60 காளைகளும் ஆயிரம் மாடு பிடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிவரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் நேர்த்தியாக அடக்கி வருகிறார்கள். இந்த போட்டியில் முதலிடத்தை பிடிக்கும் காளைக்கும் காளையருக்கும் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.