மும்பையைச் சேர்ந்த ஹர்ஷ்மாவ்ஜி அரேதியா என்ற சிறுவன் தனது தந்தையிடம் பானிபூரி கேட்டுள்ளார். உடனே சிறுவனின் தந்தை தனது மகனை அழைத்துக் கொண்டு காரில் சென்றுள்ளார். அப்போது முன்னால் அதிவேகமாக வந்த ஒரு கார் சிறுவன் சென்ற கார் மீது மோதியது. இதனால் கார் முன் இருக்கையில் இருந்த ஏர் பேக் வேகமாக இயங்கி சிறுவன் மீது மோதியது.

இதனால் சிறுவன் மயக்கமடைந்தான். உடனே அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பாலிட்ராமா எனப்படும் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியை உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.