குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த தாய் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

ஆனால் தான் இறந்து விட்டால் குழந்தைகளும் அனாதையாகி விடுமே என்ற எண்ணத்தில் குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து அவரும் குடித்துள்ளார். மறுநாள் காலையில் மூன்று பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.