உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் குழந்தைகளின் கால்களை கழுவியா சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நவராத்திரி விழாவானது இந்த வருடம்  செப்டம்பர் 26-ம் தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்துவமான பூஜை சடங்குகளுடன் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முக்கிய நிகழ்வான துர்கா பூஜை   நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கோரக்நாத் அமைச்சர் அலுவலக வளாகத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது குறித்த வீடியோ ஒன்று ட்விட்டரில் பகிரப்பட்டது. “சக்தியின் திருவுருவமான நமது சக்தி தேவியின் அருள் அனைத்து உயிர்கள் மீதும், அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.