குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பராக் தேசாய். வாக் பக்ரி டீ குழுமத்தின் இயக்குனரான இவர் கடந்த 15 ஆம் தேதி வாக்கிங் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தெரு நாய்கள் இவரை கடிக்க விரட்டின.

இதனால் பராக் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற போது தவறுதலாக கீழே விழுந்து அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.