பெண்கள், எஸ்சி மற்றும் எஸ் டி இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்கான ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கடன் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த கடனுக்கு வங்கிகளை வழங்கலாம் எனவும் முழுமையான விவரங்களை அறிய https://www.standupmitra.in/ என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.