பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களான ராகுல் குமார், அர்மான் அலி, அகிலேஷ் குமார், பிரின்ஸ் குமார் ஆகிய நால்வரும் ஜார்கண்ட் மாநிலத்தில் கணினித்துறை பயின்று வந்தனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த பத்து தினங்களாக குளிர்ந்த காத்து வீசி வருவதால் குளிர் காய நினைத்த மாணவர்கள் அறைக்குள் நிலக்கரியை எரித்துள்ளதா கூறப்படுகிறது.

இதில் அதிக அளவு புகை ஏற்பட்டு நான்கு பேரும் அந்த புகையை சுவாசித்து உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு உறவினர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.