டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் 108, இளநிலை உதவியாளர் 2604 உட்பட 6224 பணியிடங்களுக்கு 20,37,094 பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப்-4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.