கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 16-ஆம் தேதி ஆடி அமாவாசை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு ஈடாக வருகிற செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விடுமுறை தினம் அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலகங்கள் அரசு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.