இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் டால்பின் ஒன்று தனது குட்டியை காப்பாற்றிய அவருக்கு நன்றி செலுத்தியதுடன் தனது குட்டிகளையும் அழைத்து வந்து பாசப் போராட்டம் நடத்திய சம்பவம் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.

மனிதர்களிடம் பாசமாக நடந்து கொள்வதில் டால்பின்கள் பெயர் போனவை. மனிதர்கள் செய்யும் உதவிக்கு நன்றி செய்யும் காட்சியை பல நேரங்களில் நாம் பார்த்து இருக்கிறோம். அதன்படி இங்கு வளையல் சிக்கிய டால்பின் குட்டியை நபர் ஒருவர் காப்பாற்றிய நிலையில் அதன் தாய் தனது குடும்பத்துடன் வந்து நன்றி தெரிவித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.