சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒன்று வெளியாகி வைரல் ஆகும். எடுத்துக்காட்டாக கல்யாண பேனர், சுவரொட்டி போன்றவை ஆகும். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் காபி கடை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள பேனர் சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

பிளாக் காபி எனும் காபி கடையில் வைக்கப்பட்டிருந்த அந்த போர்டில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் இலவசம், 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு டீ இலவசம், தூய்மை பணியாளருக்கு டீ இலவசம் என உரிமையாளர் குறிப்பிட்டிருந்தார். இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் வெளியான இந்த புகைப்படத்திற்கு “எல்லோரும் காசு சேர்க்கறாங்க இவர் புண்ணியத்தை சேர்க்கிறார்” என்றும் ஏராளமானோர் “கடையின் உரிமையாளரை பார்க்க வேண்டும்” என்றும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பேனர் பார்க்க