திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை அன்னை நாகம்மாள் தெருவில் ஆண்டியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனுசியா, மீனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் அனுஷியாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வேலுவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வந்த வேலு தனது மனைவியை அரிவாளால் வெட்ட முயன்றார்.

உடனே சுதாரித்துக் கொண்ட ராமலட்சுமி அந்த அரிவாளை பிடுங்கி தனது கணவரை சரமாரியாக வெட்டினார். இதனால் படுகாயமடைந்த வேலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராமலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.