திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் அருகே கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை புவனேஸ்வரி அருகே இருக்கும் கடைக்கு காய்கறி வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் புவனேஸ்வரிடம் போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் ஏன் நகையை கழுத்தில் போட்டு சுற்றுகிறீர்கள்? சமீபத்தில் இரண்டு பேர் கத்திய காட்டி மிரட்டி நகையை பறித்துள்ளனர்.

எனவே போலீஸ் உயர் அதிகாரிகள் எங்களை மப்டியில் கண்காணிக்க அனுப்பி வைத்ததாக கூறினர். இதனை தொடர்ந்து அவர்கள் புவனேஸ்வரிடம் இருந்து நகையை வாங்கி மணி பரிசில் போட்டு விட்டதாக கூறி அவரிடம் கொடுத்தனர். பின்னர் புவனேஸ்வரி மணி பரிசை திறந்து பார்த்தபோது நகைக்கு பதிலாக கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.