இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்போதுமே சந்தோஷம் நிறைந்து இருக்கும். அதன்படி தற்போது அம்மா மற்றும் மகன் பாச காணொளி ஒன்றை இணையத்தில் வெளியாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது.

பெண் பிள்ளைகள் தன்னுடைய தந்தையை கவனித்துக் கொள்வதும் அவர்கள் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பதையும் பார்த்திருப்போம். இங்கு சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தபோது சோபாவில் படுத்திருந்த சிறுவனின் தாய் கீழே விழச் சென்றுள்ளார். உடனே விரைந்து சென்ற சிறுவன் தன்னுடைய தாயை சரியாக படுக்க வைத்து விட்டு அதன் பிறகு அவரை பாதுகாக்க அவரது பக்கத்தில் ஒரு சிறிய சேர் ஒன்றில் அமர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.