மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஏசிஜே போஸ் கல்லூரியில் டோர்ன் ஜீன்ஸ் எனப்படும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் களை அணிந்து வர மாட்டோம் என மாணவர்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஏ சி ஜெ போஸ் கல்லூரி இணையதளத்தில் உள்ள செயற்கை அறிவிப்பில் முறையான ஆடைகளை மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்லூரியில் இந்த நடவடிக்கைக்கு மாணவர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.