இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது . இன்னும் சொல்லப்போனால் இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது . இந்திய தனித்து அடையாள ஆணையம் ஆதாரில் உள்ள விபரங்களை பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆன்லைனில் இலவசமாக ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆதார் தகவல்களை எப்போதும் பொதுமக்கள் புதுப்பித்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் ‘my aadhar’  எனவும் என்ற இணையதளம் மூலமாக ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.