இந்தியாவின் அங்கீகரிக்கப்படாத வியாபாரிகள் மூலமாக சிம்கார்டு விற்கப்படுவது கண்டறியப்பட்டால் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளின்படி சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தொலைதொடர்பு துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது சிம்கார்டு இணைப்பை மையமாகக் கொண்டு பல மோசடிகள் நடைபெறுகின்றன. அதனை கட்டுப்படுத்தும் விதமாக சிம் கார்டு விற்பனையை ஒழுங்குபடுத்த திட்டமிட்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் மத்திய அரசு வகுத்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன.

அதன்படி அனைத்து சிம்கார்டு விற்பனை நிலையங்களையும் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்பு அரசிடம் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது . இந்த புதிய விதி அமலுக்கு வந்த பிறகு பதிவு செய்யப்படாத வியாபாரிகள் மூலம் சிம்கார்டு விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டால் விதிகளை மீறியதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.