மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தேவாஸ் என்ற மாவட்டத்தில் காலி சிந்து நதிக்கரையில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை கிராம மக்கள் கண்டுள்ளனர். இதனால் சிறுத்தையை காண அங்கு மக்கள் கூட்டம் கூடியது. ஆரம்பத்தில் சிறுத்தையின் அருகில் செல்ல மக்கள் பயந்தாலும் அதன் ஆக்ரோஷம் தென்படாததால் அந்த நோய்வாய்ப்பட்ட சிறுத்தையுடன் விளையாட தொடங்கினர். ஒரு கட்டத்தில் சிலர் அந்த சிறுத்தையின் மேல் அமர்ந்து சவாரி செய்ய தொடங்கினர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தையை மீட்டனர். தற்போது சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரியல் பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய்வாய் பட்ட சிறுத்தையை கூட்டமாக சேர்ந்து பலரும் துன்புறுத்தும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.