முன்னணி விமான தயாரிப்பு பன்னாட்டு நிறுவனமான ஏர்பஸ் பிரான்ஸ் கிளையில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு ஊழியர்களுக்கு விருந்து கொடுக்கப்பட்டது. இந்த விருந்தில் 2600 ஊழியர்கள் பங்கேற்றனர். விருந்தில் பலவகையான அசைவ உணவுகள் ஐஸ்கிரீம்கள் போன்றவை பரிமாறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விருந்தில் பங்கேற்ற 700 பணியாளர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி, தலைவலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வரும் நிலையில் உணவை ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.