அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரியங்கா திவாரி. இவர் சம்பவத்தன்று காவல் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனது 10 வயது மகன் மூச்சு பேச்சு இல்லாமல் கிடப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து மருத்துவ குழு விரைந்து சென்று சிறுவனை பார்த்த போது சிறுவனின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

இதனால் பல நாட்களுக்கு முன்பே சிறுவன் உயிர் இழந்ததை புரிந்து கொண்ட மருத்துவ குழு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தது. இதையடு்த்து பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் சடலத்தை அனுப்பி வைத்த காவல்துறையினர் வீட்டை சோதனை செய்தது வீட்டில் உணவு எதுவும் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

அதோடு சிறுவனின் உடலும் மிகவும் மெலிந்து காணப்பட்டுள்ளது. இதனால் பிரியங்கா திவாரி தனது மகனுக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளார். இதனால் தான் சிறுவன் உயிர் இழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.