இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் சீனாவுக்கு சொந்தமான நிக்கல் உருக்காலை அமைந்துள்ளது. நேற்று இந்த ஆலையில் உள்ள உலை ஒன்றில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சமயத்தில் திடீரென உலை வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இந்தோனேசியர்கள் 9 பேர் சீனர்கள் 4 பேர் என 13 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் கட்டட சுவர்கள் சேதம் அடைந்து 45க்கும் அதிகமான தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.