அமெரிக்காவின் நிகரகுவாவின் மாதகல்பா பகுதியில் பேருந்து ஒன்று 70 க்கும் அதிகமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது இந்த பேருந்து மன்சேரா ஆற்றின் மீது உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புக் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.