இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 7 முதல் இரு நாடுகளுக்கு இடையே போர் நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் வான் வழியாக தாக்கி வந்த இஸ்ரேல் அதன் பிறகு தரை வழியாக காசாவுக்குள் ஊடுருவியது.

சமீப நாட்களாக தரை வழி தாக்குதலை தெற்கு காசாவில் இஸ்ரேல் தீவிர படுத்தியது. இந்நிலையில் தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில் முன்னேறி வந்த இஸ்ரேல் படையை குறிவைத்து ஹமாஸ் அமைப்பு தாக்குதல் மேற்கொண்டது.

இதில் 15 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதன் மூலமாக தரைவழி தாக்குதல் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் வீரர்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.