இந்தியாவில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் விதமாக கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடன் வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தில் விவசாயிகள் ஏழு சதவீதம் பட்டியுடன் 3 லட்சம் ரூபாய் வரை உரிய காலத்தில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

விவசாயிகள் எந்தவித பாதுகாப்பு வைப்பு தொகையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தினால் மூன்று சதவீதம் வட்டி சலுகை கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு உள்ளூர் வங்கிகளை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.