தமிழ்நாடு சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் குறையவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் போதை பொருட்களை அடியோடு ஒழித்து இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம். அதிமுக ஆட்சியில் தான் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் இரண்டு மடங்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், காவல்துறையில் சில கருப்பு ஆடுகள் உள்ளது இதை களையெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக  தெரிவித்துள்ளார்.