இந்தியாவில் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்று மாசு காரணமாக பல மாநிலங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழலில் தீபாவளியை முன்னிட்டு வெடி வெடிப்பது மற்றும் மத்தாப்பு கொளுத்துவது போன்ற கொண்டாட்டங்களால் காற்று மாசு மேலும் தீவிரமடையும் என மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால் சுவாச கோளாறு மற்றும் இதய பாதிப்பு போன்ற பல பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளதால் உன்னை எச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள சுகாதாரத் துறைக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.