வேலூரில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் dmk பொருளாளர் டிஆர் பாலு பங்கேற்று பேசியபோது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சுக்கு டிஆர் பாலு பதிலடி கொடுத்தார்.

அதாவது “தமிழ்நாடு முதல்வர் கேட்ட கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியாத ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முழுக்க முழுக்க கற்பனைக் கதையை உருவாக்கி தமிழகத்திற்கு பல திட்டங்களை அள்ளி வீசியது போல் கானல் நீர் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார்.

9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்புத் திட்டம் கூட அளிக்கவில்லை என அமித்ஷா ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இருப்பதாக டிஆர் பாலு பதிலடி கொடுத்துள்ளார்.