கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி, 7ஆம் தேதி என இரண்டு முறை பள்ளிகள் திறப்பு அறிவிக்கப்பட்டு, பின்னர் கோடை வெயில் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே இன்று 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்குகின்றன.

இதையடுத்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடிய அரசு பள்ளியில் முதல் ஆளாக பள்ளிக்கு வந்த மாணவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பூக்கொடுத்து வரவேற்றார். மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் மகிழ்வோடு வரவேற்பு அளித்தார். மாவட்டந்தோறும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சாலை எங்கும் பரபரப்பாக காணப்படுகிறது.