கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி, 7ஆம் தேதி என இரண்டு முறை பள்ளிகள் திறப்பு அறிவிக்கப்பட்டு, பின்னர் கோடை வெயில் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே இன்று 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்குகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 6-12ம் வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட உடனே, மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட இலவச நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன. படநூல்கள் வழங்கப்பட்ட உடன், இன்றே ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தரவும், அதேபோல், விளையாட்டுகளுக்கு நேரம் ஒதுக்கவும் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.