மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்தவர் ஷெரின் தாகி சேப்ரா. இவர் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சன ராய் என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் விரத்தி அடைந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி ஆந்திர மாநிலத்தில் உள்ள பாலாசார ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்த இந்த ஜோடி மூன்றாவது பிளாட்பாரத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலச நோக்கி சரக்கு ரயில் வந்து கொண்டிருந்த சமயத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்தவர்கள் அவர்களை பரிசோதனை செய்து ஆதார் அட்டை மூலம் அவர்களது விபரங்களை தெரிந்து கொண்டனர். மேலும் இருவரது சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.