கேரள மாநிலம் கோட்டையம் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் கார் ஒன்றில் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது. அந்த காரின் உள்ளே ஒரு நபர் அமர்ந்திருப்பது தெரிந்துள்ளது. ஆனால் அவர் வெகு நேரம் ஆகியும் காரில் இருந்து இறங்கவில்லை. இதனால் பூங்காவுக்கு வந்த மக்கள் சந்தேகம் அடைந்து கார் கண்ணாடியை தட்டிப் பார்த்துள்ளனர்.

ஆனால் எந்த பதிலும் இல்லாததால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது காருக்குள் இருந்தது ஐயப்பனும் கவுசியும் என்ற மலையாள படத்தில் மூலம் பிரபலமான நடிகர் வினோத் தாமஸ் என்பது தெரிய வந்தது.

மேலும் சுயநினைவு இல்லாமல் இருந்த அவரை காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது இறப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.