கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருக்கு சென்னையை சேர்ந்த சௌந்தர்யா என்பவர் தனது ஒன்பது மாத குழந்தையுடன் கணவனை பார்க்க வந்துள்ளார். அதிகாலை பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயற்சித்த போது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை சௌந்தர்யா மிதித்ததில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து குழந்தையும் அவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். கணவர் கண்ணெதிரே மனைவியும் குழந்தையும் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.