பங்களாதேஷ் பெண் ஒருவர் தனது காதலனை திருமணம் செய்வதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். திரிபுராவின் தர்மநகர் உட்பிரிவில் உள்ள ஃபுல்பாரியில் வசிக்கும் நூர் ஜலால் என்பவர் ஆயுர்வேத பயிற்சி செய்கிறார். இவர் பங்களாதேசத்தில் உள்ள மவுல்வி பஜாருக்கு அடிக்கடி செல்வது வழக்கம். இந்நிலையில், பங்களாதேசத்தில் 24 வயது திருமணமான ஃபதேமா நுஸ்ரத் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து, காதலுக்காக அப்பெண் இந்தியா வந்துள்ளார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் காதலுக்காக எல்லை தாண்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.