இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் 25 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் செய்தி தொடர்பாளர் எய்லோன் லெவி பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் பேசுகையில் “ஹமாஸை காசா பகுதியில் இருந்து முற்றிலுமாக அழிக்க போகிறோம். அதுதான் நமது இலக்கு.

ஹமாஸுக்கு சொந்தமான ஒவ்வொரு ராக்கெட் லாஞ்சரையும் ஒவ்வொரு சுரங்கப் பாதைகளையும் ஒவ்வொரு ஹமாஸ் அமைப்பினரையும் பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறோம். பாலஸ்தீனியர்களையும் சேர்த்து பொதுமக்கள் அனைவரது உயிரிழப்பையும் குறைக்க எங்களால் முடிந்த அளவிற்கு முயற்சிக்கிறோம்” என கூறியுள்ளார்.