இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 25 நாட்களாக நீடித்து வருகிறது. இந்த போரில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே இஸ்ரேலில் இருந்து பணய கைதியாக பிடித்து செல்லப்பட்ட பெண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்டவர்களில் ஒருவர் தான் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஷனி லவுக். இவரை ஹமாஸ் அமைப்பினர் அலங்கோலமான கோலத்தில் டிரக் ஒன்றில் படுக்க வைத்து கடத்திச் சென்றனர். இந்நிலையில் ஷனி லவுக் கொல்லப்பட்டதாகவும் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.