இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 25 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரினால் சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த அபு மாஷாக் என்பவர் காசா மக்களை பாதுகாக்க வேண்டியது இஸ்ரேல் மற்றும் ஐநாவின் பொறுப்பு. நாங்கள் எங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் போது அதிலிருந்து தப்பிக்க தான் சுரங்க பாதைகளை அமைத்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.