ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய இந்த மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு சிறுமி மின்சாரக் கம்பத்தைத் தொட்டபடி எந்த அசைவும் இல்லாமல் நிற்கிறார். இதைப் பார்த்தால் ஏதோ அவர் சாதாரணமாக நிற்பது போலத் தோன்றும், ஆனால் உண்மையில் மின்சாரம் பாய்ந்ததால் அவரது கைத் தசைகள் இறுகி (Let-go phenomenon), அவரால் கையை எடுக்க முடியாமல் மரணப் போராட்டத்தில் இருந்துள்ளார்.
Sometimes touching a power pole can make a person unable to let go: this is called the “let-go phenomenon.” Electric current entering the body causes hand muscles to lock, making release impossible. While it may look calm, danger grows with every second.pic.twitter.com/Tl0KeTNF9P
— Massimo (@Rainmaker1973) January 21, 2026
அதிர்ஷ்டவசமாக, அந்த வழியாக வந்த ஒரு நபர் சிறுமி ஏன் அப்படி அசையாமல் நிற்கிறார் என்பதைச் சட்டென்று புரிந்து கொண்டார். அவர் துணிச்சலாகச் செயல்பட்டு, சரியான முறையில் அந்தச் சிறுமியை மின் கம்பத்தில் இருந்து அப்புறப்படுத்தி, மரணத்தின் பிடியில் இருந்து மீட்டெடுத்துள்ளார். ஒவ்வொரு நொடியும் ஆபத்து அதிகரித்துக் கொண்டிருந்த வேளையில், அந்த நபரின் துரிதமான செயல் ஒரு பிஞ்சு உயிரைக் காப்பாற்றியுள்ளது. மின்சாரம் பாயும் போது உடல் எவ்வாறு செயலிழக்கிறது என்பதையும், விழிப்புணர்வு எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது.
