பீகாரில் ஒரு நபர் ரயிலுக்குள் தனது மாடுகளுடன் பயணம் செய்யும் இந்த வினோதமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அவசரத் தேவைகளுக்கு டாக்ஸி அல்லது வாகனங்கள் கிடைக்காத போது, இந்தியர்கள் தங்களுக்குத் தெரிந்த வழியில் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள் (Jugaad). ஆனால், இந்த நபர் ஒரு படி மேலே போய், சக பயணிகள் அமரும் ரயில் பெட்டியிலேயே தனது மாடுகளை ஏற்றி அழைத்துச் சென்று அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார்.
A man in Bihar travelling on a train with his cows.
When Uber says “No service available”, Indian jugaad says “Say no more.” 🚆🐄 pic.twitter.com/lyyP4eY2ZZ— Believer (@PredatorVolk) January 20, 2026
இந்த வீடியோவில் அந்த மாடு ரயில் பெட்டிக்குள்ளேயே சாணம் போட்டு வைத்துள்ளது இன்னும் அதிர்ச்சியைத் தருகிறது. ரயில்வே சட்டங்களுக்குப் புறம்பாக, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ரயிலுக்குள் கால்நடைகளை ஏற்றிச் சென்ற இந்தச் செயல் இப்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது. “உபெர் சேவை இல்லை என்றால் என்ன, எங்களுக்கு ரயில் இருக்கிறது” என்பது போல அந்த நபர் செய்த இந்த காரியம், சிரிப்பைத் தந்தாலும் ரயிலின் தூய்மை மற்றும் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
